ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு..!

(அ . அச்சுதன் ) திருகோணமலை மாவட்டம் , சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள சோமாவதி பாலத்திற்குள் கீழ் குளித்துக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் ஒருவரின் சடலம் இன்று புதன்கிழமை (15) காலை மீட்கப்பட்டுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாற சகோதர்களும் சோமாவதி வீதி, சேருநுவர-ஜெமுனுபுர பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதர்களாவர்.இவர்களில் லக்சான் பேரரேரா (வயது 35) என்பவர் மாத்திரமே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது. தந்தை மற்றும் நான்கு மகன்கள் நேற்று செவ்வாய்கிழமை (14) மாலை சோமதி பாலத்திற்கு கீழ் உள்ள ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது அதில் மூன்று சகோதரர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்தனர்.அவர்கள் மூவரையும் தேடும் பணிகள் நேற்று மாலை முன்னெடுக்கப்பட்ட போதிலும் சடலங்கள் மீட்கப்படாத நிலையில் மீண்டும் இன்று காலை மீட்புப்பணி பணி முன்னெடுக்கப்பட்டபோது அதில் ஒருவரின் சடலம் மாத்திரம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. மீட்புப்பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதோடு சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

திருகோணமலையில் 17ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது

பேராசிரியர் பாலசுகுமாரின் எட்டு நூல்களின் அறிமுகமும், வெளியீடும்

உதயபுரியில் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள் கோலாகலம்.