டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட 50 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கல்

வவுனியா நீதிக்கான மக்கள் அமைப்பின் (PFJ) ஒருங்கிணைப்பிலும், UNOPS / VRIDDHI Programme நிறுவனங்களின் நிதி உதவியுடனும், டிட்வா புயலால் பாதிக்கப்பட்டு பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்ட 50 குடும்பங்களுக்கு தலா பத்தாயிரம் ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் நேற்று (06) வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வு செட்டிக்குளம் பிரதேச செயலகத்தில் நடைபெற்றதுடன், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதார நிலையை கருத்தில் கொண்டு மனிதாபிமான உதவித் திட்டமாக இந்நிவாரணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இந்த நிகழ்வில் செட்டிக்குளம் பிரதேச செயலகத்தின் உதவி திட்டமிடல் பணிப்பாளர், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், நீதிக்கான மக்கள் அமைப்பின் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர். புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் அவசர தேவைகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் வழங்கப்பட்ட இவ்வுலர் உணவுப் பொதிகள் வெற்றிகரமாக பயனாளிகளுக்கு விநியோகிக்கப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தானர.

Comments

Popular posts from this blog

திருகோணமலையில் 17ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது

பேராசிரியர் பாலசுகுமாரின் எட்டு நூல்களின் அறிமுகமும், வெளியீடும்

உதயபுரியில் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள் கோலாகலம்.