டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட 60 குடும்பங்களுக்கு சுகாதாரப் பொதிகள் வழங்கல்

UNOPS நிறுவனத்தின் நிதி உதவியுடனும், VRIDDHI Programme வலையமைப்பின் ஒத்துழைப்புடனும், வவுனியா மாவட்டத்தின் வவுனியா மற்றும் செட்டிக்குளம் பகுதிகளில் டிட்வா புயலால் பாதிக்கப்பட்டு வறுமைக் கோட்டிற்குள் வாழும் 60 குடும்பங்களுக்கு சுகாதாரப் பொதிகள் (Hygiene Packs) வழங்கி வைக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட குடும்பங்களின் அத்தியாவசிய சுகாதார தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்நிவாரண உதவித் திட்டம் மனிதாபிமான அடிப்படையில் செயல்படுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட அரசு சார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர், பிரதேச செயலகங்களின் அரசு சார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள், UNOPS நிறுவனத்தின் வடமாகாண மேற்பார்வையாளர் மற்றும் People for Justice (PFJ) அமைப்பின் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார நிலையை கருத்தில் கொண்டு முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வு வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Comments

Popular posts from this blog

திருகோணமலையில் 17ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது

பேராசிரியர் பாலசுகுமாரின் எட்டு நூல்களின் அறிமுகமும், வெளியீடும்

உதயபுரியில் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள் கோலாகலம்.